பாட்டி வைத்தியம்...

வெந்தயக் கீரையைப் பச்சையாக மென்று நின்றால் வயிறு எரிச்சல், வயிறு பொருமல் நீங்கிவிடும்.
பாட்டி வைத்தியம்...
Published on
Updated on
1 min read

வெந்தயக் கீரையைப் பச்சையாக மென்று நின்றால் வயிறு எரிச்சல், வயிறு பொருமல் நீங்கிவிடும்.

தூதுவளைக் கீரையின் சாற்றை காலை, மாலை என இரு வேளைகளும் அருந்திவந்தால், உடல் அசதிகள் நீங்கிவிடும்.

பசலைக்கீரையைப் பச்சையாக உண்டு வந்தால், மலச்சிக்கல் ஏற்படாது.

-முக்கிமலை நஞ்சன்

ஆடாதொடை வேர், கண்டாங்கத்திரி வேர் இரண்டையும் பொடி செய்து தேனில் சாப்பிட நரம்புப் பிரச்னை சரியாகிவிடும்.

அவுரி இலை, மிளகு, சீரகம் சேர்த்து கஷாயம் குடிக்க, காமாலை தீரும்.

குப்பைமேனி சாற்றை சுண்ணாம்பு கலந்து நெஞ்சுக் குழியில் தடவ சளி வெளியேறும்.

வில்வ இலை கஷாயம் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும்.

-ஏ.மூர்த்தி, புல்லரம்பாக்கம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com