

தேவையான பொருள்கள்:
அரிசி மாவு, ரவை, நெய்
தலா 100 கிராம்
மைதா மாவு, சர்க்கரை
தலா 200 கிராம்
கேசரி பௌடர் 1 சிட்டிகை
ஏலக்காய் 3
எண்ணெய் 50 கிராம்
உப்பு சிறிதளவு
செய்முறை:
வாணலியில் தண்ணீர்விட்டு அடுப்பில் காய்ந்ததும் சர்க்கரை போட்டு பாகு போன்று காய்ச்சவும். ரவையைப் பொன்னிறமாக நெய்விட்டு வறுக்க வேண்டும். சர்க்கரைப் பாகை கொதிக்கவிட்டு பின்பு ரவையை அதில் சேர்க்க வேண்டும். ரவை வெந்ததும் கிளறி அடுப்பில் இருந்து இறக்கிவிட வேண்டும்.
பின்னர், பொடித்த ஏலக்காய், கேசரி பௌடர், உப்பு ஆகியவற்றைப் போட்டு கிளறி உருண்டைகளாக உருட்டி வைக்க வேண்டும். மைதா மாவுடன் உப்பும், தண்ணீரும் பிசைந்து உருண்டைகளாக உருட்ட வேண்டும். இந்த உருண்டைகளை எடுத்து வட்டமாகத் தட்டி ரவை உருண்டை உள்ளே வைத்து, அரிசி மாவில் உருட்டி பூரியாகத் தட்டி கல்லில் போட்டு மேலே நெய் தடவி வெந்ததும் எடுக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.