தேவையான பொருள்கள்:
புழுங்கல் அரிசி, பச்சரிசி- தலா 4 கிண்ணம்
கறிவேப்பிலை, எண்ணெய், உப்பு, பெருங்காயம்- தேவையான அளவு
காய்ந்த மிளகாய்- 12
பீட்ரூட்- 500 கிராம்
தேங்காய்த் துருவல்- அரை கிண்ணம்
செய்முறை:
பச்சரிசி, புழுங்கல் அரிசி ஆகியவற்றை இரண்டு மணி நேரம் ஊறவைத்து அரைக்கவும். பின்னர், பீட்ரூட்டை தோல் சீவித் துருவவும். அதனுடன் பெருங்காயம், உப்பு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து நன்றாக அரைக்கவும்.
இந்தக் கலவையை மாவுடன் சேர்த்து நன்றாகக் கலக்கவும். இந்த மாவை மூன்று மணி நேரம் புளிக்க வைத்து, பின்னர் அடுப்பில் தோசைக்கல்லை வைத்துக் காய்ந்ததும் சிறிது எண்ணெய்விட்டு தோசைகளாக வார்த்து எடுக்கவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.