2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

சம்பா ரவை தோசை

முதலில் சம்பா ரவையை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். ஊறியவுடன் தண்ணீரை வடித்துக் கொள்ளவும்.

News image
Updated On :29 நவம்பர் 2025, 6:31 pm

ஏ.மூர்த்தி

தேவையான பொருள்கள்:

சம்பா ரவை- 300 கிராம்

உப்பு, எண்ணெய், கறிவேப்பிலை, கொத்தமல்லி- தேவையான அளவு

இஞ்சி- 1 சிறிய துண்டு

பச்சை மிளகாய்-4

தக்காளி- 3

செய்முறை:

முதலில் சம்பா ரவையை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். ஊறியவுடன் தண்ணீரை வடித்துக் கொள்ளவும். அந்த சம்பா ரவையுடன் பொடியாக நறுக்கிய இஞ்சி, தக்காளி, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து, சிறிது தண்ணீரை விட்டு கலந்து கரகரப்பாக அரைக்கவும்.

இத்துடன் கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்துக் கலக்கவும். அடுப்பில் தோசைக் கல்லை வைத்து, சூடானதும் சிறிது எண்ணெய்விட்டு தோசைகளாக வார்த்துத் திருப்பிப் போட்டு வெந்ததும் எடுக்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.