பண்டிகையையொட்டி 15 - 20% அதிகரிக்கும் வேலைவாய்ப்பு! 2 - 2.5 லட்சம் பேருக்கு வேலை!ஆசிய விளையாட்டில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து முதல்வர் ஏன் லண்டன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு- அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

வாழைப்பூ அரைக்கீரை பொரியல்

வாழைப்பூவை நன்றாகச் சுத்தம் செய்யவும். துவரம் பருப்பில் தேவையான தண்ணீரைவிட்டு சிறிது மஞ்சள் தூள் சேர்த்து அரைவேக்காடாக வேக வைக்கவும்.

Published On :

தேவையான பொருள்கள்:

வாழைப்பூ -1

அரைக்கீரை -1 கட்டு (ஆய்ந்து சுத்தம் செய்தது)

மஞ்சள் பொடி, எண்ணெய், உப்பு - தேவையான அளவு

சீரகம் - 1 தேக்கரண்டி

பச்சை மிளகாய் - 5

சின்ன வெங்காயம் - 15

துவரம் பருப்பு - 50 கிராம்

தாளிக்க: கடுகு, உளுந்தம் பருப்பு

செய்முறை:

வாழைப்பூவை நன்றாகச் சுத்தம் செய்யவும். துவரம் பருப்பில் தேவையான தண்ணீரைவிட்டு சிறிது மஞ்சள் தூள் சேர்த்து அரைவேக்காடாக வேக வைக்கவும். சுத்தம் செய்த வாழைப்பூவை தேங்காய்த் துருவல் போல் அரைத்து, மோர் கலந்த தண்ணீரில் ஊறவைக்கவும். கீரையைப் பொடியாக நறுக்கவும்.

அடுப்பில் வாணலியை வைத்து, எண்ணெய் ஊற்றி சூடானவுடன் கடுகு, உளுந்தம் பருப்பு, சீரகம் தாளித்து, அத்துடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும். பின்னர், வாழைப்பூவைச் சேர்த்து தேவையான உப்பு போட்டுக் கிளறவும். சிறிது நேரம் கழித்து நீரை வேகவைத்துள்ள துவரம் பருப்பு சேர்த்து நன்றாகக் கிளறவும். மிதமான தீயில் நன்றாக வெந்து பொரியல் பதத்துக்கு வந்ததும் இறக்கிவிடவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.