தேவையான பொருள்கள்:
கேழ்வரகு மாவு- 4 கிண்ணம்
மிளகாய்த் தூள், எண்ணெய், உப்பு- தேவையான அளவு
இஞ்சி- 1 சிறிய துண்டு
வெங்காயம்-4
பச்சை மிளகாய்- 8
பூண்டு- 8 பற்கள்
செய்முறை:
இஞ்சி, பூண்டை நசுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாய், வெங்காயம் ஆகியவற்றைப் பொடியாக நறுக்கவும்.
இரண்டு கிண்ணம் தண்ணீரை தேவையான உப்பு சேர்த்து, கொதிக்க வைக்கவும். முதலில் இந்தத் தண்ணீரில் கேழ்வரகு மாவை கொஞ்சம், கொஞ்சமாகச் சேர்த்துக் கிளறவும். இஞ்சி, மிளகாய்த் தூள், மிளகாய், பூண்டு, வெங்காயம் ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறவும்.
இந்த மாவு ஆறியதும் சப்பாத்திகளாகத் தேய்த்து, தோசைக்கல் காய்ந்ததும் சிறிது எண்ணெய்விட்டு இரண்டு பக்கமும் நன்கு வேகவைத்து எடுக்கவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.