ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

அடுப்பறை அலப்பறை....

'வர, வர சீரியல்கள் ரொம்ப போரடிக்குதுடி...'

News image
Updated On :14 செப்டம்பர் 2025, 12:08 am IST

'வர, வர சீரியல்கள் ரொம்ப போரடிக்குதுடி...'

'ஆமாம்டி... சண்டை போட மாமியார் இல்லைன்னா அப்படிதான் இருக்கும்...'

-அ.சுஹைல்ரஹ்மான், திருச்சி.



'என்னடி... தோசையில் பொத்தல், பொத்தலா இருக்கே?''

'அத்தே... அது ஜல்லடை தோசை..!'

-மஞ்சுதேவன், பெங்களூரு.



'பசி வந்திட பத்தும் பறந்து போகுமுன்னு சொல்லுவாங்களே... முதலாவது எதுடி...?'

'பர்ஸில் இருக்கிற பணம்தான்!'



'ஏன்டி... உங்க வீட்டில் நீ நின்னுகிட்டே சாப்பிடுறே?'

'குந்தி தின்றால் குன்றும் கரையும்னு பழமொழி தெரியாதா உனக்கு?'

-ரத்னம் மரகதம், கோவை.



'என்னங்க? நீங்களா கேட்பீங்கன்னு நினைச்சேன்... ஏன் அழுதேன்னு கேட்டீங்களா!'

'இல்லை... வெங்காயம் அரிந்ததாலே அழுதியோன்னு நினைச்சேன்..!'



'அத்தே... விஷயம் தெரியுமா? எதிர்வீட்டில் வீட்டோட மாப்பிளையா இருந்தவரு பிறந்த வீட்டுக்கே ஓடிப் போயிட்டாராம்!'

'எதுக்காம்..?'

'சொன்ன வேலை செய்யலைன்னு வேலைக்காரி திட்டினாளாம்..!'



'அம்மா... பெண்டாட்டிக்கு மட்டுமே பயந்த நான் இப்போ வேலைக்காரிக்கும் பயப்படுற மாதிரி ஆயிடுச்சி..!'

'என்ன ஆச்சு..?'

'வேலைக்காரி சொல்வதுதான் என் மனைவிக்கு வேதவாக்கு...'

-வி.ரேவதி, தஞ்சாவூர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.