மருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

மிக்ஸியை எப்படி பயன்படுத்த வேண்டும்?

லோ வோல்டேஜ் ஆக இருந்தால் மிக்ஸியை உபயோகிக்கக் கூடாது. மோட்டார் கெட்டு விடும்.

News image

மிக்ஸி - மிக்ஸி

Updated On :28 செப்டம்பர் 2025, 12:18 am IST

லோ வோல்டேஜ் ஆக இருந்தால் மிக்ஸியை உபயோகிக்கக் கூடாது. மோட்டார் கெட்டு விடும்.

ஜாரில் 3-இல் 2 பங்குதான் பொருளை நிரப்ப வேண்டும். அதிகம் போட்டால் விரைவாக பழுதுபடும்.

அரிசி மாவு கெட்டியாகத் தேவைப்படும் போது அரிசியை கெட்டியாக அரைப்பதாலும் மிக்ஸி கெட்டு விடும்.

ஜாரில் போட்டு அரைத்ததும் உடன் அதில் தண்ணீர் ஊற்றி ஸ்லோ ஸ்பீடில் வைத்து அலம்பித் தனியாக எடுத்து வைக்க வேண்டும். பாத்திரம் கழுவும் போது சேர்த்துக் கழுவலாம் எனப் பாத்திரத்தோடு சேர்த்துப் போடக் கூடாது.

மிக்ஸி பிளேடுகள் சாணை வைக்கவே கூடாது. மிக்ஸி பிளேடுகள் மோட்டாரின் வேகத்தை பொறுத்தே நைசாக அரைக்கும்.

மிக்ஸியின் பிளேடுகள் மழுங்கி விட்டால் கல் உப்பை ஒரு கை அளவு எடுத்து மிக்ஸியில் போட்டு ஒரிரு நிமிடங்கள் மிக்ஸியை ஓட்டவும். பிளேடுகள் கூர்மையாகி விடும்.

ஜார்களில் ரிப்பேர் ஆகி அடிப்பகுதியில் தண்ணீர் கசிவு இருந்தால் உடன் ஜாரை சரி பார்க்க வேண்டும். இல்லையென்றால் தண்ணீர் மோட்டாரில் இறங்கி மிக்ஸியில் பழுது ஏற்பட்டு விடும்.

சூடான பொருள்களை மிக்ஸியில் அரைக்கக் கூடாது.

மிக்ஸியில் அரைக்கும் போது சூடு உண்டாகிறதா என்பதைக் கவனித்து இடைவெளி விட்டு அரைக்க வேண்டும்.

மிக்ஸி ஓடும் போது திறந்து பார்க்கக் கூடாது.

அரைக்கும் பொருள்களுடன் பிளேடு சுலபமாக சுற்றக் கூடிய அளவு தண்ணீர் விட்டு அரைக்க வேண்டும். இல்லையெனில் பிளேடு உடையவோ, மோட்டார் எரியவோ நேரிடலாம்.

-எல். நஞ்சன், நீலகிரி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.