தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

புடலங்காய் தோசை

புடலங்காயைப் பொடியாக அரிந்துகொள்ளவும். மாவுகளையும் ரவையையும் காரப்பொடி, உப்பு, பெருங்காயப்பொடி சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைக்கவும்.

News image
Updated On :2 பிப்ரவரி 2026, 4:33 pm

இணையதளச் செய்திப் பிரிவு

தேவையான பொருள்கள்:

பிஞ்சுப் புடலங்காய் (பாம்புப் புடலாக இருந்தால் நலம்) நறுக்கிய தூள் - ஒரு கிண்ணம்

அரிசி மாவு - ஒரு கிண்ணம்

கடலை மாவு - அரை கிண்ணம்

வெள்ளை ரவை -அரை கிண்ணம்

காரப்பொடி - 4 மேஜை கரண்டி

பெருங்காயப்பொடி - கால் மேஜை கரண்டி

ஓமம் - அரை மேஜை கரண்டி

உப்பு - திட்டமாக

செய்முறை:

புடலங்காயைப் பொடியாக அரிந்துகொள்ளவும். மாவுகளையும் ரவையையும் காரப்பொடி, உப்பு, பெருங்காயப்பொடி சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைக்கவும். புடலங்காய்த் தூளை கைகளால் நொறுக்கிப் பிசைந்து மாவில் சேர்த்து பத்து நிமிடம் ஊற விடவும். பின் தோசைக் கல்லைப் போட்டு, கல் காய்ந்ததும் எண்ணெய் ஊற்றி துடைத்து, பின் மாவை தோசையாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் ஊற்றி, திருப்பிப் போட்டு சிவக்க முறுமுறுப்பாக எடுக்கவும்.

கே நாகலட்சுமி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.