தேவையான பொருள்கள்:
பிஞ்சுப் புடலங்காய் (பாம்புப் புடலாக இருந்தால் நலம்) நறுக்கிய தூள் - ஒரு கிண்ணம்
அரிசி மாவு - ஒரு கிண்ணம்
கடலை மாவு - அரை கிண்ணம்
வெள்ளை ரவை -அரை கிண்ணம்
காரப்பொடி - 4 மேஜை கரண்டி
பெருங்காயப்பொடி - கால் மேஜை கரண்டி
ஓமம் - அரை மேஜை கரண்டி
உப்பு - திட்டமாக
செய்முறை:
புடலங்காயைப் பொடியாக அரிந்துகொள்ளவும். மாவுகளையும் ரவையையும் காரப்பொடி, உப்பு, பெருங்காயப்பொடி சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைக்கவும். புடலங்காய்த் தூளை கைகளால் நொறுக்கிப் பிசைந்து மாவில் சேர்த்து பத்து நிமிடம் ஊற விடவும். பின் தோசைக் கல்லைப் போட்டு, கல் காய்ந்ததும் எண்ணெய் ஊற்றி துடைத்து, பின் மாவை தோசையாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் ஊற்றி, திருப்பிப் போட்டு சிவக்க முறுமுறுப்பாக எடுக்கவும்.
கே நாகலட்சுமி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சமையல்... சமையல்...: வடாம் வகைகள்!
தேன் மிட்டாய் செய்யும் முறை...
கோதுமை மாவு அப்பம்
வெற்றிலை சர்பத்
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



