பவளமல்லியானது சிறு, குறு மரவகையைச் சேர்ந்தது. வீடுகளிலும் தோட்டங்களிலும் காணப்படும் இது சில கோயில்களில் தல விருட்சமாகவும் இருக்கிறது.
இம்மலரின் காம்பு சிவப்பு நிறத்தில் பவளம் போன்றும், இதழ்கள் வெள்ளையாக மல்லிகை போன்றும் இருப்பதால் பவளமல்லி என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இதன் வாசனை மனதுக்கு ரொம்பவே ரம்யமாக, புத்துணர்ச்சி அளிப்பதாகவும் இருக்கும். இந்த மலர் பூஜைக்கு உகந்தது. ஆஞ்சநேயருக்கு மிகவும் பிடித்தது.
பொதுவாக மலர்கள் காலையில் மலர்ந்து இரவில் உதிர்ந்து விடும். ஆனால், இது இரவில் மலர்ந்து, காலையில் உதிரும். இதன் வேர் முதல் விதை வரை எல்லாமே மருத்துவக் குணங்களைக் கொண்டது.
இதன் பூவோடு இலையையும் சேர்த்து கஷாயம் செய்து குடித்தால், காய்ச்சல் குறையும். கரோனா உள்பட எந்த வகைக் காய்ச்சலாக இருந்தாலும் பூவுடன் இஞ்சி, மிளகு, பூண்டு, மல்லி சேர்த்து கஷாயமாக்கிக் குடிக்கலாம் என சித்த மருத்துவத்தில் சொல்கிறார்கள். மேலும், மூட்டு வலி, இடுப்பு வலி, முதுகு வலி போன்ற நரம்பு பிரச்னைகளுக்கு இந்த கஷாயத்தைத் தொடர்ந்து குடித்து வரலாம்.
இதன் காயை நன்கு காய வைத்து, பொடி செய்து, ஒரு பங்குக்கு இரண்டு பங்கு என்ற விகிதத்தில் நல்லெண்ணெய் கலந்து தலை குளித்து வந்தால் பொடுகு, பேன், சிரங்கு, அரிப்பு ஆகியவை குணமாகும்.
அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் இது மலர்வதால் 'பிரம்ம வர்ஷினி' என்ற பெயரும் இதற்கு உண்டு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தில்லியில் ரூ. 21.46 லட்சம் முதலீட்டு மோசடி: இருவா் கைது

சிறு, குறு நிறுவனத்தினருக்குப் பயிற்சி

தொழிற்சாலை மூலப்பொருள்கள் விலையைக் கட்டுப்படுத்த கோரிக்கை

தென்காசி மாவட்ட தொழிற்சங்க பொதுக்குழுக் கூட்டம்
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை

