தேவையான பொருள்கள்:
காலிப்ளவர் - துருவியது
உருளைக்கிழங்கு - சிறியது (துருவியது)
பச்சை மிளகாய் - 4 (பொடியாக நறுக்கியது )
இஞ்சி (பொடியாக நறுக்கியது), கொத்துமல்லித் தழை, சீரகம், மிளகாய்த் தூள், கரம் மசாலா -தேவையான அளவு.
செய்முறை:
வாணலியில் எண்ணெய் ஊற்றி சீரகம், இஞ்சி, பச்சை மிளகாய் போட்டு நன்கு வதக்கவும். அதனுடன் காலிப்ளவர், உருளைக்கிழங்கை போட்டு நன்கு வதக்கவும். பிறகு மிளகாய்ப் பொடி, கரம் மசாலா, உப்பு, கொத்துமல்லித் தழை போட்டு கலக்கி இறக்கி ஆற வைக்கவும்.
இட்லி ஊத்தும் பாத்திரத் தட்டில் ஒரு லேயராக இட்லி மாவு ஊற்றி, அதன் மேல் மசாலா வைத்து, மீண்டும் அதன் மேல் மாவு ஊத்தி அடுப்பில் வைத்து எடுக்கவும்.
நாகஜோதி கிருஷ்ணன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.