
கண்ணதாசன் ஒரு சமயம், பெண்கள் கூட்டத்தில் இவ்வாறு ஒரு கேள்வி கேட்டார்- "நீங்கள் எல்லோரும் பூ வெச்சிருக்கீங்க. ஆனால் இந்தப் பூக்கள் எல்லாம் வாடிவிடும்.
ஆனால் ஒரே ஒரு பூ மட்டும் வாடாமல் வளரும். அது என்னவென்று சொல்லுங்கள் பார்ப்போம்?' என்றார்.
பலரும் பலவிதமான பதில்களைக் கூறினர்.
கண்ணதாசன் சொன்னார், "சிரிப்பு, இனிப்பு என்று பலரும் பலவித பதில்களைச் சொன்னார்கள். அவையெல்லாம் கிடையாது.
வளர்ந்துகிட்டே இருக்கிற பூ சேமிப்புதான். ஓரளவு நீங்க சேமித்துவிட்டு அப்படியே விட்டால்கூட வட்டி மூலம் வளர்ந்துகிட்டே இருக்கும்!'
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.