பஞ்சன் என்னும் சிறுவனோ
பாடம் படிக்க எண்ணினான்
நெஞ்சில் ஏதோ குழப்பத்தில்
நாளை படிக்க எண்ணினான்
அடுத்த நாளில் படித்திட
எடுத்தான் புத்தகம் கையிலே
பிடித்த நண்பன் ஒருவனோ
பிடித்தான் போனில் அவனையே!
""மட்டைப் பந்து ஆட்டமே
மாதா கோவில் தெருவிலே
நெட்டை மணியும் ஆடுறார்
நீயும் வாடா போகலாம்''
-என்றே அழைக்கப் பஞ்சனும்
எழுந்தே பறந்தான் பார்த்திட
அன்றும் படிப்பு நின்றது
அதுபோல் பலநாள் சென்றது
தேர்வு நாளும் வந்தது
கேள்வித் தாளைத் தந்தனர்
ஆர்வம் பொங்கப் பார்த்தனன்
அவனின் உள்ளம் நொந்தது
பாடம் படிக்கா பஞ்சனோ
பரீட்சை எழுதத் தவித்தனன்
வாடிப் போன மனத்துடன்
வந்தான் தோல்வி முகத்துடன்!