பொன்மொழிகள்

எனது நூலகமே எனக்குப் போதியபெருஞ்செல்வமாகும்! - ஷேக்ஸ்பியர்
பொன்மொழிகள்
Updated on
1 min read

நூலகம்

1.அறிவுப் போராட்டத்துக்கான படைக்கலன்கள் செய்யும் படைவீடு நூலகம்! - இங்கர்சால்

2.எனது நூலகமே எனக்குப் போதிய
 பெருஞ்செல்வமாகும்! - ஷேக்ஸ்பியர்

3.நூலகங்கள் பண்டை உலகின் சின்னங்கள்;
 இக்கால உலகின் புகழ்க்கொடிகள்!
 - லாங்ஃபெல்லோ

4.இக்காலத்தின் உண்மைப் பல்கலைக்கழகம்
 நூல்களின் தொகுதிதான்! - கார்லைல்

5.நூலகமே ஒரு தனி உலகம். அதன் உள் சென்று
 வந்தால் அறிஞனாகலாம் - கலைஞனாகலாம்
 - கவிஞனாகலாம்! - அபீப் முகமது ஜின்னா

6.என் நூலகமே என் பணிக்கு அடிப்படை; என் உள்ளும் புறமும் இன்பமும் ஆறுதலும் தருவதாகும்! - கிப்பன்

7.நூல்கள் இல்லாத வீடு சாளரம் (ஜன்னல்) இல்லாத வீடு!
 - ஹோம்ஸ்மான்

8.தோழனுக்காகக் கூடத் திறந்து சொல்லாத சொற்கள், கருத்துகள் உனக்காகத் தெளிவாக விளக்கப்பட்டுக் காத்திருக்கின்றன! - எமர்சன்
 -தொகுப்பு: கோ.தமிழரசன், செஞ்சி.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com