தமிழ்போல் இனிய மொழியுண்டோ - வண்ணத்
தமிழ்போல் அழகிய மொழியுண்டோ?
அமிழ்தம் அதிலே கலந்திருக்கும் - நல்
அழகிய சுவைதான் நிறைந்திருக்கும்
சந்தம் கலந்து தாளமிடும் - அதில்
சிந்தும் நிறைந்து பாலமிடும்
அகத்தியர் எழுதிய தமிழல்லவோ - அன்பு
ஒüவை பாடிய தமிழல்லவோ
கம்பன் பேசிய தமிழல்லவோ - எங்கள்
வள்ளுவன் வடித்த தமிழல்லவோ
எங்கள் பாரதி சொன்னமொழி - அந்த
பாரதி தாசனின் கன்னல் மொழி
வாழிய வாழிய வாழியவே - எம்
வளமார் தமிழ்தான் வாழியவே!