பாப்பா பாட்டு

துன்பம் நெருங்கி வந்தபோதும்-நாம்சோர்ந்துவிட லாகாது பாப்பா
பாப்பா பாட்டு
Updated on
1 min read

 துன்பம் நெருங்கி வந்தபோதும்-நாம்
 சோர்ந்துவிட லாகாது பாப்பா
 அன்பு மிகுந்த தெய்வமுண்டு-துன்பம்
 அத்தனையும் போக்கிவிடும் பாப்பா
 
 சோம்பல் மிகக் கெடுதி பாப்பா-தாய்
 சொன்ன சொல்லைத் தட்டாதே பாப்பா:
 தேம்பியழும் குழந்தை நொண்டி,-நீ
 திடம் கொண்டு போராடு பாப்பா
 
 தமிழ்த் திரு நாடு தன்னைப் பெற்ற-எங்கள்
 தாயென்று கும்பிடடி பாப்பா!
 அமிழ்தில் இனியதடி பாப்பா!-நம்
 ஆன்றோர்கள் தேசமடி பாப்பா!
 
 சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே,-அதைத்
 தொழுது படித்திடடி பாப்பா!
 செல்வம் நிறைந்த ஹிந்துஸ்தானம்-அதைத்
 தினமும் புகழ்ந்திடடி பாப்பா!
 வடக்கில் இமயமலை பாப்பா-தெற்கில்
 வாழும் குமரிமுனை பாப்பா!
 கிடைக்கும் பெரியகடல் கண்டாய்-இதன்
 கிழக்கிலும் மேற்கிலும் பாப்பா!
 
 வேதமுடையதிந்த நாடு,-நல்ல
 வீரர் பிறந்ததிந்த நாடு!
 சேதமில்லாத ஹிந்துஸ்தானம்-இதைத்
 தெய்வமென்று கும்பிடடி பாப்பா!
 
 சாதிகள் இல்லையடி பாப்பா
 குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்;
 நீதி உயர்ந்த மதி கல்வி-அன்பு
 நிறைய உடையவர்கள் மேலோர்!
 
 உயிர்களிடத்தில் அன்பு வேணும்,-தெய்வம்
 உண்மையென்று தானறிதல் வேணும்;
 வயிரமுடைய நெஞ்சு வேணும்;-இது
 வாழும் முறைமையடி பாப்பா!
 
 மகாகவி பாரதியார்
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com