விவேகாநந்தர் பொன் மொழிகள்

எல்லா ஆற்றலுக்கும் நீயே சொந்தக்காரன்.நல்ல எண்ணங்களைக் கருவிகளாகக் கொள்.
விவேகாநந்தர் பொன் மொழிகள்
  • எல்லா ஆற்றலுக்கும் நீயே சொந்தக்காரன்.
  • நல்ல எண்ணங்களைக் கருவிகளாகக் கொள்.
  • சொந்தக் காலில் நிற்க உதவுவதே உண்மைக் கல்வி.
  • அன்பு இருந்தால் நீ எல்லாம் உள்ளவன்.
  • தலையிலிருந்து கால்வரை ஒவ்வொரு நரம்பிலும் செயல் துடிப்பு வேண்டும்.
  • கடவுளை அறிய விரும்பும் எந்தப் பிரிவும் விரும்பத்தக்கதே.
  • குருவின் அருளால் சீடன் நூல்களின்றியே அறிஞன் ஆகிறான்.
  • இந்த உலகம் பெரியதொரு பயிற்சிக் கூடம். நம்மை வலிமைப்படுத்திக் கொள்வதற்காகவே இங்கு வந்திருக்கிறோம்.
  • கோழைத்தனத்தைவிட பெரிய பாவம் வேறு எதுவும் இல்லை. கோழைகள் என்றுமே காப்பாற்றப்படமாட்டார்கள்.
  • மிருகத்தை மனிதனாகவும், மனிதனைக் கடவுளாகவும் உயர்த்தும் கருத்தே மதம்.
  • பாயும் ஆறே தூயது. சஞ்சரிக்கும் துறவியே தூயவன்.
  • நன்மையிலும் தூய்மையிலும் வலிமை உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com