கருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
/

பொன்மொழிகள்

கவலையுடன் வாழ்பவர்கள் இறப்பதற்கு அவசர அழைப்பு விடுக்கிறார்கள்

News image
Updated On :25 டிசம்பர் 2015, 6:07 pm IST

கவலையுடன் வாழ்பவர்கள் இறப்பதற்கு அவசர அழைப்பு விடுக்கிறார்கள்

- யாரோ

கலக்கத்தைக் கடன் வாங்குபவர்கள் கொடுக்கும் வட்டி கவலை!

- ஜார்ஜ் வாஷிங்டன்

கவலையைக் கடன் வாங்குவது உன் இயல்பாக இருக்கலாம். ஆனால் அதை அடுத்தவனுக்குக் கடன் கொடுக்காதே.

- குட்ஹார்ட் கிப்ளிங்

வேலை கொல்வதைவிடக் கவலையே அதிகம் பேரைக் கொல்கிறது! காரணம் அதிகம் பேர்கள் வேலை செய்வதை விட கவலையே படுகிறார்கள்!

- பியர்ட் ஃப்ரண்ட்

நேற்றைய தவறுகளுக்கும், நாளை நடக்கப்போகும் இன்னல்களுக்கும் கவலைப்படுவது வீண் கால விரயம்!

- யாரோ

நீங்கள் நிமிர்ந்து நிற்கும்போது உங்கள் நிழல் குறுகி இருக்கிறது என்று கவலைப்படாதீர்கள்!

- சீனப்பழமொழி

கவலை வாழ்க்கையின் துரு! அது ஒளியை அழித்து விடுகிறது. ஆற்றலை வலுவிழக்கச் செய்து விடுகிறது. கடவுளிடம் நம்பிக்கை வைப்பதே அதைத் தடுத்துத் தீர்க்கும் ஒரே வழி.

- டிரையன் எட்வர்ட்ஸ்

இரண்டு நாட்களைப் பற்றி எவரும் கவலை கொள்ள வேண்டாம். அந்த இரண்டு நாட்கள் நேற்றும் நாளையும்!

- ராபர்ட் ரால்ஃப் இஞ்சே

கவலைப்படக்கூட நேரமில்லாமல் பகலில் சுறுசுறுப்பாகவும், கவலைப்படக்கூட நேரமில்லாமல் இரவில் நன்கு தூங்குபவர்களும் புனிதமானவர்கள்!

- யாரோ

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.