தமிழகத்தில் வேட்புமனு தாக்கலுக்கு நாளை கடைசி: இதுவரை 3,413 மனுக்கள் சமா்ப்பிப்பு!தமிழகத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புவானிலிருந்து வீசக்கூடிய 1,000 கிலோ வெடிகுண்டு தயாரிப்பு: மத்திய அரசு நடவடிக்கை நிலவை நெருங்கும் ‘ஆா்டெமிஸ்-2’ விண்கலம்!எழும்பூரிலிருந்து 6 விரைவு ரயில்கள் தாம்பரம் நிலையத்துக்கு மாற்றம்
/

தேர்வு பயம்

ஏனோ? தேர்வே வருகின்றாய்!எனக்கே பயமும் தருகின்றாய்

Updated On :26 செப்டம்பர் 2015, 10:06 am

சிறுவன்:

ஏனோ? தேர்வே வருகின்றாய்!

எனக்கே பயமும் தருகின்றாய்

நானோ உன்னால் துடிக்கின்றேன்

இரவும் பகலும் படிக்கின்றேன்.

எனக்கோ இங்கிலீஷ் புரியாது!

இன்பத் தமிழும் தெரியாது

கணக்கோ வரலாறு அறிவியலோ

கரைத்துக் குடித்தும் செரிக்காது!

எனவே தேர்வே! உன்வரவால்

எனக்கு ஜுரமும் அடிக்கிறது!

மனமே பயந்து நடுங்கிறது!

மண்டைக் குடைச்சல் வலிக்கிறது.

தேர்வு:

தம்பி! தம்பி! சிறுதம்பி

தயக்கம் வேண்டாம்! படி! தம்பி!

நம்பிக்கைதான் வெற்றியினை

நல்கும் கவலை விடு! தம்பி

தேர்வு என்றால் பயம்கொண்டே

சிலபேர் தோல்வி அடைகின்றார்

ஆர்வம் கொண்டே படி! தம்பி!

அடைவோம்! வெற்றி என நம்பி!

உன்னை மேலும் உயர்த்தத்தான்

ஒவ்வோர் ஆண்டும் நான்வருவேன்

அன்னை தந்தை படித்தேதான்

அடைவோம்! வெற்றி என நம்பி!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.