கதைப்பாடல்: மயிலுக்குப் போர்வை தந்த மன்னன்

பேகன் என்னும் நல்லரசன்பிள்ளை நெஞ்சம் கொண்டவனாம்
கதைப்பாடல்: மயிலுக்குப் போர்வை தந்த மன்னன்
Updated on
1 min read

பேகன் என்னும் நல்லரசன்

பிள்ளை நெஞ்சம் கொண்டவனாம்

மேக மழைபோல் மக்களுக்கு

மிகவும் நன்மைகள் செய்பவனாம்

ஒருநாள் வேட்டை ஆடிவிட்டு

ஊரை நோக்கி வரலானான்

வரும்போ தவனோ நின்றிட்டான்

வந்த வழியில் ஓரிடத்தில்

ஒடிந்து விழுந்த மரத்தடியில்

ஓங்கி வீசும் குளிர்காற்றில்

நடுங்கிக் கொண்டு நின்றதுவாம்

நல்ல தோகை மயிலொன்று

மழையில் நனைந்து விட்டதனால்

மயிலின் நடுக்கம் குறையவில்லை

இழைத்த தனது போர்வையினை

எடுத்து மயில்மேல் போர்த்திட்டான்

எல்லா உயிர்க்கும் உடலொன்றே

இல்லை வேறு பாடெதற்கும்

எல்லா உயிர்க்கும் துயரொன்றே

இல்லை வேறு பாடெதற்கும்

என்றே பேகன் நினைத்திட்டான்

இருந்தான் காவல் நெடுநேரம்

நன்றே மயிலும் பிழைத்திடவே

நல்ல விருப்பம் கொண்டானாம்

மயிலும் கண்ணைத் திறந்ததடா

மன்னன் பேகனைப் பார்த்ததடா

மயிலின் பார்வை நன்றியடா

மன்ன னுக்குச் சொன்னதடா

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com