தனது கையே தனக்கு உதவி
தாரகம் சொல்லும் சிலந்தி!
கனமும் உழைப்பு வளமே நல்கும்
கடமையை சொல்லும் எறும்பு!
நன்றி மறவா குணமே பெரிது
நயத்தைச் சொல்லும் நாய்கள்!
தன்ன லமற்ற வாழ்வு இனிது
தகவலைச் சொல்லும் தேனீ!
பரிவு கொள்வோர் நலமே சிறப்பு
பண்பைச் சொல்லும் மாடு!
மரித்த பின்னும் பயனாய் நின்று
மாண்பைச் சொல்லும் மரங்கள்!