பொன்மொழிகள்!
அன்பில் அச்சம் கலந்திருக்க முடியாது. நாம் கண்டு அஞ்சும் மனிதனிடம் நம்மால் அன்பு செலுத்த முடியாது.


அன்பில் அச்சம் கலந்திருக்க முடியாது. நாம் கண்டு அஞ்சும் மனிதனிடம் நம்மால் அன்பு செலுத்த முடியாது.
- அரிஸ்டாட்டில்
சிந்திக்காமல் படிப்பது வீண். படிக்காமல் சிந்திப்பது ஆபத்தானது.
-கன்ஃபூஷியஸ்
வரவு அறிந்து செலவு செய்வது சிக்கனம். செலவை அறிந்து வரவைச் சேர்ப்பது நற்குணம்.
- கவிதாசன்
நம்பிக்கை என்பது கண் விழித்திருக்கும்போதே காண்கிற கனவு.
- பிளினி
மகா புருஷர்களை நேரில் தரிசித்து, அவர்களுடன் உரையாட வேண்டுமா? நூலகத்திற்குப் போ!
- மாசேதுங்
எவராவது தான் தன்னுடைய வாழ்நாளில் ஒரு பிழையும் செய்ததில்லை என்று நினைத்தால் அவர்கள் தம் வாழ்வில் புதிய முயற்சிகளைச் செய்து பார்த்ததில்லை என்று பொருள்!
- ஐன்ஸ்டின்
நேற்று அசாத்தியமாய் இருந்தது இன்று சாத்தியமாகும் அற்புதத்தை, ஒவ்வொரு நாளும் நாம் கண்டு வருகிறோம்.
- விவேகானந்தர்
சோம்பல் என்பது இளைப்பாறுதல் அல்ல!....., அது வேலையைவிட அதிகக் களைப்பைத் தரும்!
- புல்லர்
நான் இன்னும் வாசிக்காத ஒரு நல்ல புத்தகத்தை வாங்கி வந்து என்னைச் சந்திப்பவனே என் தலை சிறந்த நண்பன்.
- ஆபிரஹாம் லிங்கன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...