92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

கதைப் பாடல்: கோடைக்காலம் வந்தது!

குளிரும் பயந்து ஓடிடவே கோடைக் காலம் தொடங்கியதே!

News image
Updated On :30 மார்ச் 2019, 4:30 am

நா. இராதாகிருட்டிணன்


குளிரும் பயந்து ஓடிடவே 
கோடைக் காலம் தொடங்கியதே!

ஒளிரும் சூரியன் ஆட்சியிலே
உடலை வெயிலும் வாட்டிடுதே!!

மண்ணும் பொன்னும் உருகிடுதே
மண்ணில் பயிர்கள் கருகிடுதே!

தண்ணீர் எல்லாம் வற்றிடுதே
தாகம் நமக்கு மிகுந்திடுதே!

தண்ணீர் நிறைய குடித்திடணும்
தலைக்கு எண்ணெய் தேய்த்திடணும்

கண்களைக் கவனமாய்க் காத்திடணும்!
குளிர்ந்த நீரில் குளித்திடணும்!

பருத்தி ஆடை நம்முடலைப் 
பாது காப்பாய் வைத்திருக்கும்!

அருவியாய் வியர்வை கொட்டாமல் 
அதுவும் நம்மைக் காத்திருக்கும்!

நீருடன் மோரும் இளநீரும் 
நமதுடல் சூட்டைத் தணித்துவிடும்!

சீருடன் உடலை வைத்திருந்தால் 
சித்திரை வெயிலும் பணிந்து விடும்!

வெய்யில் கொளுத்தும் நேரத்தில் 
வீதியில் வேண்டாம் விளையாட்டு!

செய்யும் செயல்கள் இனிதானால் 
சிறந்திடும் நமது உடற்கட்டு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.