92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

அச்சம் வேண்டாம்!

உடலைச் சுத்தமாய் வைத்தாலே ஓடிப் போகும் பல நோய்கள்!

News image
Updated On :11 ஏப்ரல் 2020, 12:52 pm

நா. இராதாகிருட்டிணன்

உடலைச் சுத்தமாய் வைத்தாலே 
ஓடிப் போகும் பல நோய்கள்!

படை கொண்டு தாக்கும் கொரானாவை 
விரட்டியடிக்கச் செய்வோமே!

தொட்டவர்க்கெல்லாம் பரவுமெனில் 
தொடுவதை நாமும் தவிர்த்திடுவோம்!

சோப்பைப் போட்டுக் கையை அடிக்கடி 
சோம்பலில்லாமல் கழுவிக்கொள்!

பட்டுக்கொண்டால் தான் உறவா?
எட்ட இருந்தே பேசிடுவாய்!

எங்கேயிருந்து வந்ததென்று 
எண்ணிக் காலம் கடத்தாமல் 

இங்கேயிருந்து விரட்டிடுவோம்!
இதற்கோர் முடிவு கட்டிடுவோம்!

தொற்றும் கிருமி உள்ளதென 
தற்காத்துக் கொள்ளச் சொல்கின்றார்!

வெளியில் செல்ல வேண்டாமென்று
வேண்டிக் கேட்டுக் கொள்கின்றார்

வீட்டில் தங்கி இருப்போம் நாம்
விரட்டி அடிப்போம் கிருமிதனை!

எடுத்து எறிவோம் அச்சத்தை
இனி நாம் தொடுவோம் உச்சத்தை!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.