இனிய சொல்லால் வாழ்க!

ஒரு செடியில் முள்ளும் மலரும்;முள்ளை எவரே விரும்புவர்?அருமை மணமும் அழகும் நிறைந்த 
இனிய சொல்லால் வாழ்க!

ஒரு செடியில் முள்ளும் மலரும்;
முள்ளை எவரே விரும்புவர்?
அருமை மணமும் அழகும் நிறைந்த 
மலரைத் தானே விரும்புவர்!

ஒரு முகிலில் இடியும் மழையும்;
இடியை எவரே விரும்புவர்?
பெருமைக் குரிய மழையைத் தானே 
உயிராய் மதித்து விரும்புவர்!

ஒரு மொழியில் ஏச்சும் பேச்சும்;
ஏச்சை எவரே விரும்புவர்?
கரும்பின் சாறாய் சுவைக்கும் இனிய
பேச்சைத் தானே விரும்புவர்!

ஒன்று சொல்வேன் நன்று கேள் - நீ 
உலகோர் விரும்பும் ஒருவனாய்
என்றும் மலர்போல், மழைபோல் சான்றோர்
இனிய சொல் போல் வாழ்க நீ!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com