குறள் பாட்டு: இல்வாழ்க்கை

இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் முயல்வாருள் எல்லாம் தலை.
குறள் பாட்டு: இல்வாழ்க்கை

அறத்துப்பால்   -  அதிகாரம்  5  -  பாடல் 7


இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் 
முயல்வாருள் எல்லாம் தலை.

- திருக்குறள்

நல்ல நல்ல எண்ணங்களை
உள்ளங்களில் பதித்து வைத்து 
குடும்பமாக வாழ்பவர்கள் 
தலைசிறந்த பேராவர்

நல்லியல்பாய் இல்லறத்தை 
நடத்திடுவோர் வாழ்வதற்கு 
முயல்கின்ற மக்களிலே
முதலிடத்தைப் பெற்றிடுவார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com