மகான்!

எல்லோர்க்கும் தான் தாத்தா! - மகாத்மா காந்தி எனும் நம்  தாத்தா!பாலரோடு, இளையோர்க்கும்
மகான்!

எல்லோர்க்கும் தான் தாத்தா! - மகாத்மா 
காந்தி எனும் நம்  தாத்தா!
பாலரோடு, இளையோர்க்கும்
மூத்தோர்க்கும் வழிகாட்டி!

இடுப்பில் அரையாடை !
தோளில் ஒரு துண்டு!
படிப்பினையாய் வாழ்ந்தார்!
பாரோர் வியப்புற்றார்!

கை ராட்டையிலே நூல் நூற்று -கீதை 
வழியில் தான் நடந்து 
கடமையை முடித்திட்டார் 
கண்டோம் நாம் விடுதலையை!

கடிகாரம் பார்க்கவில்லை! 
துளிகாலம் பிசகவில்லை! - தேச
விடுதலைக்காகத் தன் 
வாழ்நாளை அர்ப்பணித்தார்!

உயிர்வாழச் சிறிதுணவு! - மானம் 
உடல் மூடத்தான் உடைகள்!
சுயமாய் உழைத்துண்ணும் - வாழ்வே
சொர்க்கம் எனச் சொன்னார்!

உள்ளம்  எல்லாம் தூய்மை 
உதிர்த்ததெல்லாம் வாய்மை!
அஹிம்சை ஆயுதத்தால் - இவர் 
அந்நியரை வென்றுவிட்டார்!

வேற்றுமை எல்லாம் விலக்கி 
ஒற்றுமையை இவர் வளர்த்தார்! 
கண்கண்ட தெய்வம் இவர் - எனக் 
கரம் கூப்பி வணங்கிடுவோம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com