வேதத்தில் காணப்படும் பொன்மொழிகள்

செயல்களை தூய்மையாக்குபவனே சிறந்த அறிவாளி எனப் போற்றப் படுகிறான்.
வேதத்தில் காணப்படும் பொன்மொழிகள்
Published on
Updated on
1 min read


செயல்களை தூய்மையாக்குபவனே சிறந்த அறிவாளி எனப் போற்றப் படுகிறான்.

தனது வருவாயைக் காட்டிலும் குறைத்தே செலவு செய்ய வேண்டும் என்பதுதான் சிறந்த தர்மம்.

ஒருவன் மேன்மை அடைவதற்குக் காரணம் அவனது குணமும், நன்னடத்தையுமேயன்றி  அவனது செல்வமோ, அறிவோ அல்ல.

இயற்கையிலேயே சிறந்த மனிதர்கள் அடுத்தவர்கள் துயர் கண்டு சகிக்க  மாட்டார்கள்.

தாழ்ந்த நிலை வந்தபோதும் நல்ல குணமுடையவர்கள் தங்கள் சுபாவத்தை மாற்றிக் கொள்ள மாட்டார்கள்.

குறிக்கோளை அடைவதற்கு சகிப்புத்தன்மை ஒரு மிக நல்ல சாதனம்.

தன்னம்பிக்கை கொண்டவர்களுக்கு உலகத்தின் எல்லா செல்வங்களும் கைக்கெட்டிய தூரத்தில் உள்ளன.

ஒருவரின் நற்செயலைக் கண்டு எல்லாவித செல்வங்களும் அவருக்குத் துணையாக நிற்கின்றன.

இதயத்தில்  அன்புக்கு இடமிருந்தால் அதில் பிரபஞ்சமே குடியிருக்கும்.

தன்னிடத்தில் அனைத்து உயிர்களையும், அனைத்து உயிர்களிலும் தன்னையும் காண்பவனுக்குப் பொறாமையோ, ஆசையோ, வெறுப்போ ஏற்பட வாய்ப்பே இல்லை!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com