மக்கட்பேறு!
By DIN | Published On : 25th February 2020 11:08 AM | Last Updated : 25th February 2020 11:08 AM | அ+அ அ- |

குறள் பாட்டு
அறத்துப்பால் - அதிகாரம் 7 - பாடல் 7
தந்தை மகற்கு ஆற்றும் நன்றி அவையத்து
முந்தி யிருப்பச் செயல்.
- திருக்குறள்
பிள்ளைக்குத் தந்தை செய்யும் நன்மை
பெரியோர் இருக்கும் அவையிலே
முதலிடத்தில் இருப்பதற்கு
அறிவைப் புகட்ட வேண்டுமே
கண்களைப்போல் பிள்ளைகளைக்
கருத்தாய் வளர்க்க வேண்டுமே
பிள்ளைகட்கு நல்லறிவு
பெற்றோர் தர வேண்டுமே.
-ஆசி.கண்ணம்பிரத்தினம்
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...