குறள் பாட்டு: இனியவை கூறல்
By DIN | Published On : 14th March 2020 09:59 PM | Last Updated : 14th March 2020 09:59 PM | அ+அ அ- |

அறத்துப்பால் - அதிகாரம் 10 - பாடல் 7
நயன் ஈன்று நன்றி பயக்கும் பயன் ஈன்று
பண்பின் தலைபிரியாச் சொல்.
- திருக்குறள்
பயன் உள்ள சொற்களை
பண்பு அழியாச் சொற்களை
வளமையாகப் பேசினால்
நல்ல வாழ்வு கூடுமே
நல்லவற்றைப் பேசினால்
பிறர்க்கு நன்மை ஆகிடும்
அதற்கு நன்றியாகவே
நமக்கு நன்மை சேர்ந்திடும்
-ஆசி.கண்ணம்பிரத்தினம்
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...