சிறிய விளக்கின் ஒளி பிரகாசிப்பதைப் போல சிறிய நற்செயல்களும் பிரகாசிக்கும்!
- அரிஸ்டாட்டில்
எவனைக்கண்டு உலகம் பிரமிக்கிறதோ அவன் பெரியவன். எவன் தன்னைக் கண்டு பிரமிக்கிறானோ அவன் சிறியவன்.
- கண்ணதாசன்
பயமும், சந்தோஷமும் ஒரே மனதில் குடியிருக்க முடியாது.
- ùஸனகோ
எளிமையானவர்களை பெருந்தன்மையுடனும், மரியாதையுடனும் நடத்துபவனே பெரிய மனிதன்.
- கார்லைல்
பிரச்னை என்பது, உங்களைத் திறமையுடன் செயல்பட வைக்க ஏற்படும் சந்தர்ப்பமே!
- ட்யூக் வெல்லிங்டன்
இறைவனிடம் பேச விருப்பமா?.... அப்படியானால் அதிகாலையில் எழுந்து விடுங்கள்.
- கே.ஆர்.போரவல்
கவலை என்பது இனி நடக்கப்போகும் துக்கத்தைக் குறைப்பது இல்லை. அது இன்றைய சந்தோஷத்தையும் கெடுத்துவிடுகிறது.
- லியோபஸ் கேக்லியா
கடன் கொடுக்கும்போது சாட்சி சொல்ல சிலர் இருப்பது நல்லது. தருமம் செய்யும்போதோ அருகில் யாருமே இல்லாமல் இருப்பது நல்லது.
- ஜான் ரஸ்கின்
வாக்குறுதியைப் பாராட்டிக் கைகள் தட்டப்படும்போது அதில் எதிர்பார்ப்பின் ஒலியும் கலந்திருக்கும்
- ஹென்றி ஃபோர்டு
உலகத்தில் நிறைய சாதனைகள் நிகழ்ந்துள்ளன. அத்தனையும் உற்சாகத்தினால்தான்!
- எமர்சன்
தொகுப்பு : அ.ராஜாரஹ்மான், கம்பம்.