பொன்மொழிகள்

எந்தச் செயலைச் செய்தால் பின்னர் மனம் வருந்துமோ, எதன் பயனை அழுதுகொண்டே அனுபவிக்க நேருமோ அது நற்செயல் ஆகாது.  
பொன்மொழிகள்
Updated on
1 min read

எந்தச் செயலைச் செய்தால் பின்னர் மனம் வருந்துமோ, எதன் பயனை அழுதுகொண்டே அனுபவிக்க நேருமோ அது நற்செயல் ஆகாது.   
-  புத்தர்

நேரம் கிடைக்கிறதா, திட்டமிடு. பல செயல்கள் நிறைவேற திட்டமிடுதலே காரணம். 
- பா. விஜய்

நீதி, சத்தியம், தெளிவான புத்தி, தைரியம் இவற்றை விட சுகம் தரும் பொருள் ஏதும் இவ்வுலகில் இல்லை.  
-மார்க் ஒளரேலியஸ்

பணிவு என்பது தாழ்மையின் சின்னமல்ல...  அது ஒரு உயர்ந்த பண்பின் அறிகுறி.   
-புத்தர்

எல்லா உயிர்களிலும் இறைவன் உள்ளார். எனவே அனைவருக்கும் சேவை செய்ய வேண்டும்.  
-  ராமகிருஷ்ண பரமஹம்சர்

சினம் விலகும்போது ஞானம் நெருங்குகிறது.   
-   யாரோ

இறைவனை நெருங்க, நெருங்க சுமை குறைகிறது.  
-  ராமகிருஷ்ண பரமஹம்சர்

உயர்ந்த நோக்கத்திற்காக அளிக்கப்படுவதே சிறந்த தானம்; தியாகம்; அருட்கொடை.  
-  வெ.இறையன்பு

தரும சிந்தனையே மனிதனின் அமைதியான இருப்பிடம்! நன்னடத்தையே அவனது பாதை. 
- மென்சியஸ்

தருமம் செய்வதால் பணப்பை காலியாகிறது! ஆனால் இதயம் நிறைகிறது! 
- விக்டர் ஹ்யூகோ

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com