கீழே உள்ள குறிப்புகளைக் கொண்டு, சொற்களைக் கண்டுபிடித்து, கொடுக்கப்பட்டுள்ள கட்டங்களில் வரிசைக்கு ஒன்றாக சொற்களை நிரப்பவும். ஒவ்வொரு வரிசையிலும் வட்டமிட்டுக் காட்டப்பட்டுள்ள கட்டத்தில் உள்ள எழுத்துகளை எடுத்து ஒன்றாகக் கோர்த்தால் சுவையான முறுக்குக்குப் புகழ்பெற்ற ஊரின் பெயர் கிடைக்கும்.
விடைக்குப் போகாமல் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்...
1. இதற்கு இரண்டு பக்கமும் அடி விழும்.
2. நாடகம், சினிமா, பொருட்காட்சி ஆகியவற்றுக்கு இதைச் செலுத்தினால்தான் அனுமதி கிடைக்கும்.
3. வீட்டில் எலித்தொல்லை அதிகமிருந்தால் இது அவசியம் தேவை.
4. தாத்தாவை மிகவும் மரியாதையாக இப்படியும் அழைப்பார்கள்.
5. குற்றம் செய்து தண்டனை பெற்றவர்களை இங்குதான் வைப்பார்கள்.
விடை:
கட்டங்களில் வரும்
சொற்கள்
1. மத்தளம்
2. கட்டணம்
3. எலிப்பொறி
4. பாட்டனார்
5. சிறைச்சாலை
வட்டங்களில் சிக்கிய எழுத்துகள் மூலம் கிடைக்கும் சொல் : மணப்பாறை