1. பரந்து விரிந்தவன், பல வண்ணம் காட்டுகிறான்.
2. நீரில் வேட்டையாடும் எங்க ஊர் வெள்ளைச்சாமி, வலை இல்லாமலேயே மீன் பிடிப்பான்.
3. எல்லாவற்றையும் பார்க்கும் இவர்களால், ஒருவரையொருவர் பார்க்க முடியாது.
4. குதிரில் கொட்டி வைக்காத தானியம், கொடை வள்ளல் கொடுக்காத தானியம்.
5. அங்கும் இங்கும் துள்ளுவான், அலுக்காமல் துவளாமல் துள்ளுவான்.
6. வானிலிருந்தும் வருவான், பூமிக்கடியிலிருந்தும் வருவான்.
7. உப்பை உண்டதால், ஓயாமல் இரைகிறான்.
8. இஷ்டம்போலக் காடு மேடுகளில் பாடுவான், கச்சேரியில் மட்டும் பாட மாட்டான்.
விடைகள்
1. வானம்
2. கொக்கு
3. கண்கள்
4. ஆற்று மணல்
5. தவளை
6. மழை நீர், கிணற்று நீர்
7. கடல், கடல் அலை
8. வண்டு