பிறரிடமிருந்து நல்லனவற்றைக் கற்றுக்கொள்ள மறுப்பவன் இறந்தவனுக்கு ஒப்பாவான்.
- விவேகானந்தர்
உதடுகளை மூடு! இதயத்தைத் திற!
- விவேகானந்தர்
நாம் உலகிற்கு வந்ததே சேவை செய்வதற்காகத்தான். பிறரை அடக்கி ஆள்வதற்கு அன்று!
- நோவாலின்
எல்லோரையும் நம்புவது ஆபத்துதான். ஆனால் யாரையுமே நம்பாலிருப்பது பேராபத்து!
- ஆபிரஹாம் லிங்கன்
நாம் திரட்டும் பொருள் மற்றவர்களுக்கு எந்த அளவு உதவுகிறதோ அந்த அளவிற்கே நமக்குக் கிடைக்கும் மகிழ்ச்சியும் இருக்கும்.
- தாகூர்
நோயைத் தொடக்கத்திலேயே குணப்படுத்துங்கள். கடனை சிறியதாக இருக்கும்போதே செலுத்திவிடுங்கள்.
- கதே
குறைகளைச் சுட்டிக்காட்டுபவர்களை வரவேற்கக் கற்றுக்கொள். எந்த அளவு இதைச் செய்கிறாயோ அந்த அளவு வேகமாக முன்னேறுவாய்.
- அரவிந்தர்
நீங்கள் அமைதியாக இருந்தால்தான் மற்றவர்களுக்கும் அமைதி கிடைக்கும்படி உங்களால் செயல்பட முடியும்.
- தாமஸ்
ஆரோக்கியம்தான் செல்வம்! அதற்கு வரி ஏதும் கொடுக்க வேண்டியதில்லை!
- ஆர்னால்ட் கிளாúஸாவ்