அன்பு என்னும் எழுத்தைப் படித்தவனே சிறந்த பண்டிதன்!
- கபீர்
மூர்க்கனுடன் சேர்ந்து சிரிப்பதைவிட, விவேகமுள்ளவனுடன் கண்ணீர் விடுவது மேல்.
- விக்டர் ஹ்யூகோ
வாழ்வு என்னும் துணியில் நன்மை, தீமை என்ற இருவகை நூல்கள் இருக்கும் !
- ஷேக்ஸ்பியர்
தோல்வியின் மூலம் கற்றுக்கொள்ளும் பாடங்களின் மதிப்பு, வெற்றியின் மூலம் கிடைக்கும் பரிசுகளைவிட உயர்ந்தவை!
- லெனின்
அன்பு செலுத்தும் மனிதர்களுக்கு பொருள் ஒரு பொருட்டல்ல.
- மு.வரதராசனார்
சோம்பலை உதறிவிட்டு, சுறுசுறுப்போடு இயங்கும் மனிதன் ஒளி வீசுகிறான்.
- பெய்லி
கல்வியின் நோக்கம் நன்னெறியைப் பரப்புவதே.
- விவேகானந்தர்
பொறுமையும் சிறந்த பிரார்த்தனையே
- புத்தர்
சமயத்தில் உதவும் கைகள் புனிதமானவை
- இங்கர்சால்
தவறை உணர்வதே அதைத் தவிர்ப்பதற்கான முதல் படியாகும்.
- ஸ்ரீஅன்னை