கீழே உள்ள குறிப்புகளைக் கொண்டு, சொற்களைக் கண்டுபிடித்து,
கொடுக்கப்பட்டுள்ள கட்டங்களில் வரிசைக்கு ஒன்றாக சொற்களை நிரப்பவும்.
ஒவ்வொரு வரிசையிலும் வட்டமிட்டுக் காட்டப்பட்டுள்ள கட்டத்தில் உள்ள எழுத்துகளை எடுத்து ஒன்றாகக் கோர்த்தால் மக்களின் பிரதிநிதிகள் கூடும் இடத்தைக் குறிக்கும் சொல் ஒன்று கிடைக்கும். எளிதில் கண்டுபிடித்து விடுவீர்கள்...
1. மகிழ்ச்சிப் பெருக்கால் உற்சாகம் அடையும் நிலை...
2. நீரைத் தன் உடலிலேயே சேமித்து வைத்துக் கொள்ளும் உயிரினம்...
3. தாத்தாவை இப்படியும் சொல்வார்கள்...
4. கோடையில் மிக அதிகமாகக் கிடைக்கும் பழம்...
5. கிறுக்கன் என்பதற்கு மாற்றுச் சொல்...
விடை:
கட்டங்களில் வரும் சொற்கள்
1. பரவசம்,
2. ஒட்டகம்,
3. பாட்டனார்,
4. தர்பூசணி,
5. பைத்தியம்.
வட்டங்களில் சிக்கிய எழுத்துகள் மூலம் கிடைக்கும் சொல் : சட்டசபை