கீழே உள்ள குறிப்புகளைக் கொண்டு, சொற்களைக் கண்டுபிடித்து, கொடுக்கப்பட்டுள்ள கட்டங்களில் வரிசைக்கு ஒன்றாக சொற்களை நிரப்பவும். ஒவ்வொரு வரிசையிலும் வட்டமிட்டுக் காட்டப்பட்டுள்ள கட்டத்தில் உள்ள எழுத்துகளை எடுத்து ஒன்றாகக் கோர்த்தால் தேர்தல் முடிந்த பிறகு கிடைக்கப்போகும் தலைவர் கிடைப்பார்.
எளிதில் கண்டுபிடித்து விடுவீர்கள்...
1. நெருப்பில் இதைப் போட்டால் நறுமணம் வரும்...
2. துன்பப்படுவோர் மீது நாம் காட்டுவது....
3. தலைநிமிர்ந்து கர்வத்துடன் நடப்பது...
4. செல்வத்துக்கான பெண் தெய்வம்...
5. இந்த ஊரில் தலையாட்டி பொம்மை கிடைக்கும்...
விடை:
கட்டங்களில் வரும் சொற்கள்
1. சாம்பிராணி,
2. இரக்கம்,
3. பெருமிதம்,
4. திருமகள்,
5.தஞ்சாவூர்.
வட்டங்களில் சிக்கிய எழுத்துகள் மூலம் கிடைக்கும் சொல் : பிரதமர்