சிந்தனையின் ஜன்னல்களும், கதவுகளும், நல்ல புத்தகங்களால்தான் திறக்கப்படுகின்றன.
- யாரோ
அனுபவங்கள் கிடைக்க வெகுநாட்கள் ஆகலாம். ஆனால் புத்தகங்கள் அவற்றை சீக்கிரமாகக் கொடுக்கின்றன.
- யாரோ
உனது தேகமே கோயில். அதில் உறைபவனே இறைவன். எனவே உடலைப் பாதுகாப்பாய்.
- திருமூலர்
மகிழ்ச்சி என்பது மனிதனுக்குள்ளே இருப்பதுதானே அன்றி, வெளியேயுள்ள வேறெவ்விதப் புறக்காரணங்களாலும் வருவதில்லை.
- பகவான் ஸ்ரீ ரமணர்
அமைச்சர்கள் முன்னாள் அமைச்சர்களாகி விடுவார்கள்! தியாகிகள் எப்போதும் முன்னாள் தியாகிகள் ஆவதில்லை!
- கலைஞர் மு. கருணாநிதி
சரியான முறையில் செய்யப்படும் முயற்சி எல்லாத் தடைகளையும் தகர்த்துவிடும்.
- ஸ்ரீ அன்னை
மகிழ்ச்சிகரமான தருணங்கள், நம்மை நாமே மறந்துவிடும் நொடிகள்தான்!
- சுவாமி விவேகானந்தர்
கூர்மையான புத்தியுடைவன் போக்கிரித்தனம் செய்யக்கூடாது. அழகாயிருப்பவர் ஆளை மயக்கக்கூடாது!
- அறிஞர் அண்ணா
உலகை வெற்றி கொள்ள வேண்டுமானால் பிறரைப் பற்றி இழிவாகப் பேசாதிருத்தல் வேண்டும்.
- சாணக்கியன்
தான் செய்த தவறைத் திருத்திக்கொள்ள முயற்சிப்பதில் அவமானம் கிடையாது.
- மூதறிஞர் ராஜாஜி