பொன்மொழிகள்

சிந்தனையின் ஜன்னல்களும், கதவுகளும், நல்ல புத்தகங்களால்தான் திறக்கப்படுகின்றன.
பொன்மொழிகள்


சிந்தனையின் ஜன்னல்களும், கதவுகளும், நல்ல புத்தகங்களால்தான் திறக்கப்படுகின்றன.
 - யாரோ

அனுபவங்கள் கிடைக்க வெகுநாட்கள் ஆகலாம். ஆனால் புத்தகங்கள் அவற்றை சீக்கிரமாகக் கொடுக்கின்றன. 
- யாரோ

உனது தேகமே கோயில். அதில் உறைபவனே இறைவன். எனவே உடலைப் பாதுகாப்பாய். 
- திருமூலர்

மகிழ்ச்சி என்பது மனிதனுக்குள்ளே இருப்பதுதானே அன்றி, வெளியேயுள்ள வேறெவ்விதப் புறக்காரணங்களாலும் வருவதில்லை. 
- பகவான் ஸ்ரீ ரமணர்

அமைச்சர்கள் முன்னாள் அமைச்சர்களாகி விடுவார்கள்! தியாகிகள் எப்போதும் முன்னாள் தியாகிகள் ஆவதில்லை! 
- கலைஞர் மு. கருணாநிதி

சரியான முறையில் செய்யப்படும் முயற்சி எல்லாத் தடைகளையும் தகர்த்துவிடும். 
- ஸ்ரீ அன்னை

மகிழ்ச்சிகரமான தருணங்கள், நம்மை நாமே மறந்துவிடும் நொடிகள்தான்! 
- சுவாமி விவேகானந்தர்

கூர்மையான புத்தியுடைவன் போக்கிரித்தனம் செய்யக்கூடாது. அழகாயிருப்பவர் ஆளை மயக்கக்கூடாது! 
- அறிஞர் அண்ணா

உலகை வெற்றி கொள்ள வேண்டுமானால் பிறரைப் பற்றி இழிவாகப் பேசாதிருத்தல் வேண்டும். 
- சாணக்கியன்

தான் செய்த தவறைத் திருத்திக்கொள்ள முயற்சிப்பதில் அவமானம் கிடையாது. 
- மூதறிஞர் ராஜாஜி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com