""ஏன் பையன் அழறான்?''
""..."ஒற்றைக் கண்ணனைக் கூப்பிடவா?' ன்னு புள்ளையை மிரட்டினேன்."
""பயந்து அழறானா ?''
""..."உடனே வரச் சொல்லு, பார்க்கணும்' னு அழறான்!''
- ஏ. நாகராஜன்,
பம்மல்.
""தோப்புலே மாங்கா அடிச்சோம்!... தோட்டக்காரர் பார்த்துட்டார்!''
""அச்சச்சோ!... அப்புறம்?''
""தோப்புக் கரணம் போட்டோம்!''
ஆர் . சுப்பு, 20, நா .
திருத்தங்கல் - 626130.
""ஹலோ அறிவழகன் வீடா?''
""ஆமா அவங்க அப்பா தான் பேசுறேன்...''
""அறிவு இருந்தா'' அவன் கிட்ட போனை குடுங்களேன்.....!''
பிரபு ராஜா,
செல்லூர்.
""எதுக்கு அந்த அங்கிள் கடையிலே சத்தம் போடறார்?''
""டேபிள் ஃபேன்னு சொல்றாங்களே,.....
ஃபேன் மட்டும்தானே தர்றீங்க,.... டேபிள் எங்கேன்னு சத்தம் போடறாரு?''
கு . அருணாசலம்,
தென்காசி.
""கிளாஸ்ல பாடம் நடக்கும் போது பின்னாடி திரும்பி பார்க்கவே மாட்டியா,... ஏன்?...''
""எப்படி திரும்பி பார்க்குறது?..... நான் தான் கடைசி பெஞ்ச் ஆச்சே.... !''
பிரபு ராஜா,
மதுரை - 625002.
""டேய் மணி என்ன ஆச்சு?''
""அஞ்சு பத்து ஆகுது!''
""வித்தியாசமான கடிகாரமா இருக்கே!... அஞ்சு எப்படி பத்தாகும்?....அஞ்சு அஞ்சாத்தானே இருக்கும்?''
கே . இந்து குமரப்பன்,
விழுப்புரம்.