பொன்மொழிகள்
By DIN | Published On : 27th February 2021 06:00 AM | Last Updated : 27th February 2021 06:00 AM | அ+அ அ- |

பக்திக்கும், மதிப்புக்கும் உரிய இடம் கோயில் மட்டுமல்ல.... நாம் பணிபுரியும் இடமும்தான்.
- காந்தி
வெற்றிக்கு நம்பிக்கையே துணைவன்.
- பிலிப்
வாய்ப்புகளை தக்கபடி பயன்படுத்தத் தெரிந்தவர்களே பெருமைக்குரிய மனிதராவார்.
- கோல்டன் ஸ்மித்
வறுமை நிலை இழிவல்ல..... அதை நியாயமான முறையில் கடக்க முயற்சி செய்யாமல் இருப்பதே இழிவு!
- பெலிக்வீஸ்
பேச்சில் இனிமை, உதவும் மனம், கர்வமின்மை, பொறுமை இந்த நான்கும் நல்லோர் இயல்பு.
- ஜெயேந்திரர்
உடற்பயிற்சியால் உடல் உறுதி பெறும். பொறுமையால் உள்ளம் உறுதி பெறும். - விவேகானந்தர்.
புகழ்ச்சியால் மகிழ வேண்டாம்.... நிந்தனையால் வருத்தமுறவும் வேண்டாம் .
- யாரோ
பணிவு என்பது வாழ்க்கையின் உயிர்நாடி. அது வாழ்க்கையை உயரச் செய்கிறது.
- கிருபானந்த வாரியார்.
தவறுகளைத் திருத்திக்கொண்டிருக்கும்போதே ஞானம் உதயமாகிவிடுகிறது.
- ஆதி சங்கரர்.
மற்ற உயிர்களின் மீது அளவுகடந்த அன்பும், மதிப்பும் வைத்திருப்பதே அஹிம்சையின் அடையாளம்.
- மஹாவீரர்.