அங்கிள் ஆன்டெனா: செழிப்பான பசுமைமிக்க பகுதிகளில் பூச்சிகள் அதிகம் ஏன் காணப்படுகின்றன?

பூச்சிகளின் ஆட்சி செழிப்பான பசுமைமிக்க பகுதிகளிலும் வறண்ட பாலை வனங்களிலும் கொடிகட்டிப் பறக்கத்தான் செய்கிறது.
அங்கிள் ஆன்டெனா: செழிப்பான பசுமைமிக்க பகுதிகளில் பூச்சிகள் அதிகம் ஏன் காணப்படுகின்றன?

செழிப்பான பசுமைமிக்க பகுதிகளில்தான் பூச்சிகள் அதிகம் காணப்படுகின்றன. இதற்குக் காரணம் என்ன?

பூச்சிகளின் ஆட்சி செழிப்பான பசுமைமிக்க பகுதிகளிலும் வறண்ட பாலை வனங்களிலும் கொடிகட்டிப் பறக்கத்தான் செய்கிறது. ஆனால், பகல் பொழுதுகளில் பாலைவனத்தில் பூச்சிகள் ஆஜராவதில்லை. இரவு நேரங்களில்தான் வெளியே வருகின்றன. அதிலும் கோடிக்கணக்கில் வருகின்றன. வெப்பம் மிகுந்த பகல்பொழுதில் மணலுக்கடியில் ஆழமாகப் புகுந்து கொண்டு விடுகின்றன. மணலுக்கடியிலும்கூட காய்ந்த இலைகளைக் குடை போல பயன்படுத்தி வெப்பத்திலிருந்து தப்பிக்கின்றன. பாலைவனப் பூச்சிகள் மிகவும் புத்திசாலிகள். பசுமைமிக்க பகுதிகளில் பூச்சிகள் அதிகம் காணப்படுவதற்கு, நல்ல சீதோஷ்ண நிலை, நல்ல சாப்பாடு ஆகியவைதான் முக்கிய காரணம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com