குட்டிப் பெண்ணின் ஒரு நாள்!

ஒரு குட்டிப் பொண்ணு இருந்தாளாம். உடம்பு சரியில்லாம நாலு நாளைக்குக் ஸ்கூலுக்கே போகலையாம்.
குட்டிப் பெண்ணின் ஒரு நாள்!

ஒரு குட்டிப் பொண்ணு இருந்தாளாம். உடம்பு சரியில்லாம நாலு நாளைக்குக் ஸ்கூலுக்கே போகலையாம். மறுபடி ஸ்கூலுக்குப் போகும்போது ஆசிரியர் நிறைய பாடம் நடத்திட்டாங்களாம். அந்தப் பாடங்களை காப்பி பண்ணி எழுதுறதுக்கு அவளோட பெஸ்ட் ஃபிரெண்ட் கிட்ட நோட்டு கேக்குறா. ஆனா அவ, 'இன்னைக்கு வீட்ல போய் நான் படிக்கணும்னு' சொல்லி நோட்டு கொடுக்கலையாம்.

ஆனா இன்னொரு பொண்ணு அவளே வந்து நோட்டு கொடுத்து ஹெல்ப் பண்ணினாளாம். நாம பெஸ்ட் பிரெண்டா நினைச்சவ நமக்கு உதவி செய்யாம போயிட்டாளேன்னு இந்தக் குட்டிப் பொண்ணுக்கு வருத்தம். எத்தன நாள் அவளுக்கு சாக்லேட் கொடுத்திருப்போம். எத்தன நாள் அவளுக்குக் கலர் பென்சில் கொடுத்திருப்போம். இதுமாதிரி அவ செய்ததை எல்லாம் நெனச்சு பாத்தாளாம். மனசுக்கு ரொம்ப கஷ்டமா போச்சாம். அழுகையா வந்துச்சாம். அன்னிக்கு நடந்ததையே திரும்பத் திரும்ப  நெனச்சுகிட்டிருந்தாளாம். 

மதியானம் லஞ்ச்கூட சரியா சாப்பிடலையாம். வீட்டுக்கு வந்து முகத்த உம்முன்னே வெச்சிட்டு இருந்திருக்கா. அப்போ பக்கத்து வீட்டு ஆண்டி இவளிடம் வந்து ஏதோ கேட்க, அவங்க முகத்தில் அடிச்ச மாதிரி பதில் சொல்லிட்டு எரிஞ்சி விழுந்திருக்கா.  அவளால யாரோடையும் சரியாவே பேச முடியல, டி.வி. பாக்க முடியல, சிரிக்க முடியல. அன்னைக்கு நைட் முழுசும் அதையே நினைச்சிட்டு சரியா தூங்க முடியல. இதை அவளோட அம்மா கவனிச்சுட்டாங்க. 

மறுநாள் ஸ்கூல் லீவு. லீவுன்னா வழக்கமா ஜாலியா இருப்பா? ஆனா அன்னைக்கு அவளால எதுவும் செய்ய முடியல. அன்னைக்கு எல்லோரும் ஒரு பார்க்குக்குப் போறாங்க. அந்தப் பொண்ணோட அப்பா அவள ஊஞ்சல்ல உட்கார வெச்சி தள்ளி விடுறாங்க.  ஊஞ்சல் மேலையும் கீழையும் வேகமா ஆடுது. இந்தப் பொண்ணுக்கு ஜாலியா இருக்கு.

'ஹோய் ஹோய்ன்னு' கத்துறா. ரொம்ப தள்ளாதீங்கப்பான்னு சிரிச்சிகிட்டே சத்தமா சொல்றா. அவ அப்பா கேக்கல. இன்னும் இன்னும் தள்ளி விட்டுகிட்டே இருக்காரு. அரைமணி நேரம் ஊஞ்சல்ல ஆடிட்டு, இறங்கி இன்னும் நிறைய விளையாட்டு விளையாடுறா. அவ பிரெண்ட் மேல வருத்தமா, கோபமா இருக்கிறதயே மறந்து போயிட்றா. இப்போ நிம்மதியாகிட்டா. இதையும் அவளோட அம்மா கவனிச்சாங்க. அன்னைக்கு நைட்டு அம்மா நிறைய பாயிண்டுகளை அவளுக்கு எடுத்துக்காட்டி புரிய வைத்தார். அவ தூங்கும்போது அந்தப் பாயிண்ட்ûஸ எல்லாம் தன்னுடைய கோணத்தில் இருந்து யோசிச்சுப் பார்க்கறா இப்படி...

(1) எனக்கு நோட்டுக் கொடுக்காதது அவ தப்பு. அதுக்கு நா ஏன் சாப்பிடாம, சிரிக்காம, சந்தோஷமா இல்லாம இருக்கணும். 

2. ஒரு வேளை அவளுக்கு உண்மையிலேயே அன்னிக்குப் படிக்க இருந்திருக்கும். அதனால கொடுக்காம இருந்திருக்கலாம். 

3. என் ஃபிரெண்ட் மேல கோபம்னா அதுக்கு எனக்கு ரொம்ப பிடிச்ச அப்பா அம்மாகிட்ட எல்லாம் ஏன் உம்முன்னு இருந்தேன்? 

4. ஒருத்தர் மேல உள்ள எரிச்சலை, கோபத்தை எப்பவும் நினைக்கிறது எவ்வளவு கொடுமையா இருக்கு. வேற வேலையே செய்ய முடியலையே.

5. அவ மேல உள்ள கோபத்தை, எரிச்சலை அஞ்சு நிமிஷம்கூட மறக்கனும்னு நா ஏன் நினைக்கல... இதோ இன்னைக்கு ஊஞ்சல்ல வேகமா ஆடும்போது அந்தப் பரபரப்புல அவள அப்படியே மறந்துட்டு ஜாலியா இருக்கேன். ஏன் கொஞ்சம்கூட ஒரு பிரச்னையில இருந்து வெளிய வரணுமுன்னு நான் நினைக்கல?

இப்படி யோசிச்சி யோசிச்சி அவ ஒரு முடிவுக்கு வந்தா. என்ன முடிவு.... யாரைப் பத்தியும் நெகட்டிவ்வா நினைச்சிகிட்டே இருந்தா நிம்மதியா இருக்க முடியாது. அது நம்ம எனர்ஜிய இழுத்துடும். அது நம்ம லைஃப ஜாலியா அனுபவிக்க முடியாம போயிடும். அதானால, இனிமே ரொம்ப ஃபிரெண்ட்லியா இருக்கனும்ன்னு முடிவு செஞ்சா.

மறுநாள் பிரிஸ்கா எந்திரிக்கிறா, பிரிஸ்கா அம்மா- அப்பாவுக்கு காலை வணக்கம் சொல்றா,  பிரிஸ்கா குளிச்சி யூனிஃபார்ம் போட்டு, சாப்பிடுறா, பையை எடுத்துக்கிட்டு பிரிஸ்கா கிளம்பும்போது அவ முகத்துல சூரிய ஒளி அடிக்குது. அந்த  ஒளியில அவ முகம் இன்னும் தெளிவா, அழகா தெரியுது.

நீதி:  நம் எண்ணங்கள் நன்றாக இருந்தால்தான் நம் செயல்கள் நன்றாக இருக்கும். செயல்கள் நன்றாக இருந்தால்தான் வாழ்க்கை நன்றாக இருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com