நல்ல பிள்னை என்ற பெயரை
நாளும் வாங்கணும்; - நீ
நாளுக்குநாள் நன்றாய்க் கற்று
அறிஞனாகணும்!
தூய்மையிலே உடல் உடையைத்
துலக்கி வைக்கணும்; - நீ
தொண்டுசெய்து மற்றவர்க்குத்
துணையிருக்கணும்!
அன்பு பற்றுப் பாசத்திலே
ஆளாய் வளரணும்;-நீ
நீதி நேர்மை நியாயமெல்லாம்
நிலைக்க உழைக்கணும்!
பெரியோர்க்கு மரியாதை
கொடுத்து வணங்கணும்; - நீ
பெற்றோரே தெய்வமென்றுத்
தினமும் வணங்கணும்!
உயர்ந்தவரை, படித்தவரை
நட்பு கொள்ளணும்; - நீ
ஊரை ஏய்க்கும் மனிதரிடம்
ஒதுங்கி வாழணும்!
ஊருக்கெல்லாம் எடுத்துக் காட்டும்
வகையில் வாழணும்; - நீ
வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும்
புகழை அள்ளணும்!