பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

அப்புறம் நானும் திருடன்தான்!

வேலு நாச்சியாரின் தலைமை அமைச்சரான மருதிருவர் குடிலில் நடந்தது கீழ்கண்ட நிகழ்ச்சி.

Updated On :7 பிப்ரவரி 2024, 8:47 pm IST

வேலு நாச்சியாரின் தலைமை அமைச்சரான மருதிருவர் குடிலில் நடந்தது கீழ்கண்ட நிகழ்ச்சி.
ஏழைகளுக்கு அளிப்பதற்காக, சிவகங்கை ராணி அனுப்பியிருந்த சேலைகள், கம்பளங்கள், உணவுத் தானியங்கள், கால்நடைகள் போன்றவை குடிசையைச் சுற்றி குவிந்து கிடந்தன.
இதையறிந்த திருடர்கள் சிலர் நடுஇரவில் அங்கே நுழைந்தனர். அவர்கள் தரையில் பாய் விரித்து வைத்திருந்த பழைய கம்பளியைப் போர்த்திக் கொண்டு மருதிருவர் தூங்கிக் கொண்டிருந்ததைதான் பார்த்தனர்.
சின்ன மருதுவின் காலைப் பிடித்த திருடர்கள் அவரை எழுப்பி, ""ஐயா மன்னித்து விடுங்கள். நாங்கள் ராணியார் மக்களுக்குக் கொடுத்த பொருள்களை இங்கிருந்து திருடிச் செல்ல வந்தவர்கள்தான். கடுமையான குளிரில் கிழிந்த கம்பளியை இருவர் போர்த்திக் கொண்டு தூங்குவது ஏன்?'' என்று கேட்டனர்.
அவர்களைப் பார்த்து புன்னகைத்த சின்ன மருது, ""நண்பனே! இந்தக் கிழிசல் கண்பளி கூட இல்லாத ஏழைகளுக்காக வந்த கம்பளிகள் இவை. அவர்கள்தான் இவைகளுக்கு உரியவர்கள். இவைகளை எடுத்து போர்த்திக் கொண்டால் என்னையும் திருடன் என்றுதான் சொல்ல வேண்டும்'' என்றார்.
இதைக் கேட்டதும் சின்ன மருதுவிடம் திருடவர்கள் மன்னிப்பு கேட்டு, ""இனிமேல் திருடுவதே இல்லை'' என்று உறுதி எடுத்துகொண்டு சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.