
கோடைமழை பெய்தாலே கோலாகலம்
கொடும்வெப்பம் அடக்கிவிடும் ஆனந்தம்
காய்ந்திட்ட மரம்செடிகள் விழித்துவிடும்
கால்நடைகள் துள்ளாட்டம் போட்டுவிடும்
--
குளம்குட்டை சற்றேனும் நிரம்பிவிடும்
கொடும் தாகப் பிணிவிட்டு ஓடிவிடும்
கொட்டுகிற மழையைநாம் பூசிப்போம்
குட்டைகளில் மழைநீரைச் சேமிப்போம்
--
குளிர்காற்று நமைவந்து தழுவட்டும்
குதூகுலம் மனதில்வந்து தங்கட்டும்
கோடைமழை கிடைக்காது கொண்டாடு
கருத்தாக விதைவிதைத்து மகிந்ழ்தாடு!
வசீகரன், தேனாம்பேட்டை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.