
இந்தியாவில் முதன்முதலில் பறந்த விமானம் ஹம்பர்ட்பை பிளேன். இந்த விமானம் பிப்ரவரி 18, 1911 அன்று உத்தரபிரதேசத்தின் அலகாபாத் போலோ மைதானத்திலிருந்து புறப்பட்டு நைனி ஜங்ஷனை வந்தடைந்தது. 6500 கடிதங்களைச் சுமந்து செல்லும் இந்த ஹம்பர்ட்பை பிளேனை இயக்கியவர் ஹென்றி பெக்வெட். அதன் மூலம் உலகின் முதல் அதிகாரபூர்வ அஞ்சல் விமானத்தை இயக்கிய விமானி என்ற பெருமையைப் பெற்றார்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட முதல் செமிகண்டக்டர்சிப், செமிகான் இந்தியா -2025 சர்வதேச கருத்தரங்கில் பிரதமர் மோடிக்கு மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவால் வழங்கப்பட்டது. விக்ரம் -32 எனப் பெயரிடப்பட்ட இந்த உள்நாட்டு சிப், ஏவுகணையின் அனைத்துக் கடுமையான சுற்றுச்சூழல்களிலும் இயங்குவதற்காக வடிவமைக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.