மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ் மேக்கேதாட்டு அணைக்கு எதிர்ப்பு! பேரவையில் முதல் தீர்மானத்தை முன்மொழிந்தார் முதல்வர் விஜய்!எனது அன்புச் சகோதரர்! ராகுலுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து! சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

பார்வையாளர்களைக் கவரும் பாண்டா!

பாண்டா என்பது கரடி இனத்தைச் சேர்ந்த விலங்கு. பாலூட்டியான இது கருப்பு, வெள்ளை நிறத்தில் நூதன அழகுடன் காட்சியளிக்கும்.

News image
Updated On :12 அக்டோபர் 2025, 12:04 am IST

பாண்டா என்பது கரடி இனத்தைச் சேர்ந்த விலங்கு. பாலூட்டியான இது கருப்பு, வெள்ளை நிறத்தில் நூதன அழகுடன் காட்சியளிக்கும். உலக வன விலங்கு நிதியத்தின் முயற்சியால் தற்போது இந்த இனம் பெருகி வருகிறது.

பாண்டாவின் காதுகள், கண் சுற்றுகள், கால்கள் மற்றும் தோல் பட்டைகள் கருப்பு நிறத்திலும் மற்ற பகுதிகள் வெள்ளையாகவும் இருக்கும். இதன் முக்கிய உணவு மூங்கில்.

சீனாவின் சிச்சுஆன் மலைப் பகுதிகள், கான்சு மற்றும் சான்க்சி மலைப் பகுதிகளில் காணப்படுகின்றன.

இந்தியாவின் இமயமலை, சிக்கிம் பகுதிகளிலும் பாண்டாக்கள் உண்டு. சிவப்பு வண்ண பாண்டாவான இது சிக்கிம் மாநில விலங்கு. சீனாவின் தேசிய சின்னம் டிராகன் என்றாலும், பாண்டாவுக்கும் பெரிய அந்தஸ்து உண்டு.

காட்டில் இருக்கும் பாண்டாக்கள் 30 வருடங்களும், நாட்டில் உள்ளவை 20 வருடங்களும் வாழ்வதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். பாண்டாவின் தோல் அடர்ந்த ரோமங்கள் நிறைந்தது. ஆண் பாண்டாக்களைவிட பெண் பாண்டாக்கள் சிறியவை. குழந்தை பிறந்து 40 நாள் கழியும் போது தான் கண் திறக்கும். முதலில் இளம் சிவப்பு நிறத்திலும், பிறகு வழக்கமான நிறத்துக்கும் மாறும். ஆறாவது மாதம் மரம் ஏறும்.

பாண்டாவை வருட வாடகைக்குப் பல நாடுகளின் மிருகக்காட்சி சாலைகளுக்கு வழங்கியுள்ளது சீன அரசு. பாண்டா மற்ற நாடுகளில் இருக்கும் போது குட்டியீன்றால், அதுவும் சீனாவுக்கே சொந்தம். வாடகைக் காலம் முடிந்ததும் பாண்டாவை குட்டியுடன் பத்திரமாகத் திருப்பி அனுப்பவேண்டும்.

சரி, வெளிநாட்டு மிருகக்காட்சி சாலைகள் பாண்டாவை ஏன் வாங்குகின்றன? 'தங்கள் மிருகக்காட்சி சாலையில் பாண்டா இருப்பதாக விளம்பரம் செய்தால், பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும், அதன் மூலம் வருவானம் கிடைக்கும்' என்பதால்தான்.

இனி எந்தந்த நாடுகளில் பாண்டாக்கள் உள்ளன என உத்தேசமாக அறிந்துகொள்வோமா?

சீனா -1864, அமெரிக்கா-9, ஜப்பான்-8, பெல்ஜியம்-5, ஜெர்மனி-4, பிரான்ஸ்-3, தென் கொரியா-3, ஸ்பெயின்-3, மலேசியா-3, இங்கிலாந்து-2.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.