
சாலைகளைப் பராமரிக்கவும், சீரானதொரு பயணத்துக்கும் சுங்கச் சாவடிகள் உதவுகின்றன. 2025-ஆம் ஆண்டின் நிலவரப்படி இந்திய தேசிய நெடுஞ்சாலைகளில் மொத்தம் 1,087 சுங்கச் சாவடிகள் உள்ளன. இவற்றை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நிர்வகிக்கிறது.
இதுதவிர, மாநில நெடுஞ்சாலைகள்,விரைவுச் சாலைகள், நகர சுங்கச் சாவடிகள் ஆகியவற்றையும் கணக்கில் கொண்டால் மொத்த சுங்கச் சாவடிகள் மூவாயிரத்துக்கும் அதிகம்.
அனைத்து மாநிலங்களையும் கணக்கில் கொள்ளும்போது, ராஜஸ்தானில்தான் மிக அதிகமாக 156 சுங்கச் சாவடிகள் உள்ளன. இங்கு மிக நீண்டதொரு நெடுஞ்சாலைகள் உள்ளன. இவை தில்லி, குஜராத், மத்திய பிரதேச மாநிலங்களை இணைக்கின்றன.
சுங்கச் சாவடிகள் அதிகமுள்ள மற்ற மாநிலங்கள்:
உத்தர பிரதேசம்-97, மத்திய பிரதேசம் -90, மகாராஷ்டிரம்-89, தமிழ்நாடு- 78, ஆந்திர பிரதேசம்- 72, தில்லி- 60, குஜராத் -58, கர்நாடகம்-55.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.