நாட்டியப் பேரொளி, திரைப்பட நடிகை பத்மினி நடத்திய நாட்டியப் பள்ளிக்கு உதவியாக, பத்மா ராமநாதன் எழுபதுகளின் கடைசியில் அமெரிக்காவுக்குச் சென்றதும், அப்போது ஒரு சமகாலத்தில் பத்மாவும் பத்மினியும் இந்தியாவுக்கு வந்ததும், அந்தச் சமயத்தில் பத்மா, பத்மினியைக் கொண்டு ஒரு சிறப்பு நிகழ்ச்சியைச் சென்னைத் தொலைக்காட்சியில் நடத்த ஏற்பாடு செய்ய முடியுமா? என என்னைக் கேட்டதும், என்னுடைய ஒரு சிறப்பு நிகழ்ச்சிக்கான தயாரிப்புப் பணி இறுதி நிலையில் இருந்ததால் ஒளிப்பதிவு செய்ய முடியாத நிலையில் நேரடி நிகழ்ச்சியில் (கண்ஸ்ங்) கலந்து கொள்ள பத்மினி வர முடியுமா? என்று கேட்டுக் கொண்டதும், அவ்வாறே பத்மினி வந்து கலந்து கொண்டதும் ஓர் உபரிச் செய்தி.